என் உயிரில் நான் நுகரத சுவாசம் நீ ! என் இதயம் தவறிய ஒரு துடிப்பு நீ ! என் மனதில் ஒளிசுழ்ந்த வெற்றிடம் நீ ! என் வார்த்தைகள் ஊமையாகும் மௌனம் நீ ! என் கற்பனையை கவிதை ஆகியவள் நீ ! என் கற்பனையின் அழகு தேவதை நீ ! என்னுள் எல்லமாகியவள் நீ ! என்றென்றும் உன் சந்தோஷமாய் மட்டும் நான் !
கவிதைகள் எழுதி குவித்தேன் என் காதலை சொல்ல ... இன்று நிறுத்திவிட்டேன் கவிதை எழுதுவதை மெல்ல... நீ என்னை காதலிக்கவில்லை என்பதால் அல்ல ... என் கவிதையால் உன்னக்கு காயம் வேண்டாம் என்பதை சொல்ல ... இனியும் என் காதலை சொல்ல நீ என்னவள் அல்ல... கவிதை எழுதுவதை நிறுத்தினேன் மெல்ல மெல்ல ... என் காதல் முடிந்துவிட்டது என்ற எண்ணம் அல்ல... என் காதலை மறைக்க போகிறேன் உன்னிடம் மெல்ல மெல்ல ... என்றும் உன்னை மட்டுமே காதலிப்பேன் என்பதை சொல்ல ...
Comments
Post a Comment